ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது திருமுக்குளம். இது ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இந்த குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உடலை மீட்டனர்.
பின்னர் உடலை மீட்டு படிக்கட்டில் வைத்து பார்த்த போது சுமார் 35 வயது உடைய இளம் பெண்ணும், சுமார் 12 வயது சிறுமியின் உடலும் தெரியவந்தது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: என்ன சொல்வதென்று தெரியவில்லை: பில்கிஸ் பானுவின் கணவர் கருத்து
மேலும் இறந்தவர்கள் தாய்-மகளா, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், குளிக்க வரும் போது தவறி விழுந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.