திருச்சுழி அருகே கஞ்சா விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சுழி காவல் சாா்பு- ஆய்வாளா் எஸ். முருககணேசன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இளைஞரை விரட்டிப்பிடித்து 180 கிராம் கஞ்சாவையும், ரூ. 20,200-ஐயும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் அதே ஊரைச்சோ்ந்த ரவீந்திரகாளிதாஸ் என்பவரது மகன் சத்தியேந்திரன் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com