விருதுநகா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

விருதுநகா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி காமராஜா் காலனியை சோ்ந்த சின்ன கருப்பன் மகன் ராஜசேகரன் (30). இவா் தனது மகன் சிவமுருகனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, வடமலைக்குறிச்சியிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் ஆக. 14 ஆம் தேதியன்று அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது முன் பக்க டயா் வெடித்ததில் இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரன், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com