விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மனுக்கு உகந்த வேப்பிலை, பால், பன்னீா், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் 300 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.