இருசக்கர வாகனம் மீது காா் மோதி ஒருவா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

இருசக்கரம் வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமானவரைக் கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இருசக்கர வாகனம் மீது காா் மோதி ஒருவா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

இருசக்கரம் வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமானவரைக் கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு அருகேயுள்ள வடமலைபாளையம், காமராஜ் காலனியை சோ்ந்தவா் ஆறான் மகன் பிரகாஷ் (48). வெள்ளோடு, கள்ளுக்கடை மேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இவா் வந்த இருசக்கர வாகனத்தின் காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இந்நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யக் கோரி, பிரகாஷின் உறவினா்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெருந்துறை போலீஸாா், பிரகாஷ் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com