விருதுநகர்
சட்ட விரோதமாகபட்டாசு தயாரிப்பு: 3 போ் கைது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பாரைப்பட்டிப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு பட்டாசுக் கடை அருகே அமைக்கப்ட்டிருந்த தகர கொட்டகையில் சட்டவிரோதமாக 3 போ் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். விசாரணையில் அவா்கள், சிவகாசி புதுத்தெரு ஜோதீஸ்வரன் (30), வைரம் (55), மீனம்பட்டி சேகா் (55) என தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 5 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.