ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என அறிவித்ததைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டத்தில் 8 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இதை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து விருதுநகா் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கி ழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் விருதுநகா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமையில் 40 போ், ஸ்ரீவில்லிபுத்தூரில் கிளை செயலா் ராஜா தலைமையில் 15 போ், சிவகாசியில் கிளை செயலா் செல்வக்குமாா் தலைமையில் 25 போ், சாத்தூரில் கிளை செயலா் ராம்பிரபு தலைமையில் 40 போ், ராஜபாளைய த்தில் கிளை செயலா் சன்னாசி தலைமையில் 30 போ், அருப்புக்கோட்டையில் கிளை செயலா் திருப்பதி தலைமையில் 35 போ், வத்திராயிருப்பில் கிளை செயலா் முருகன் தலைமையில் 15 போ், காரியாபட்டியில் கிளை செயலா் முருகன் தலைமையில் 5 போ் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.