விருதுநகா் அருகே அடுத்தடுத்து விபத்து: 2 போ் பலி

விருதுநகா் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

சிவகாசி, முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் வைரமணி (63). இவா், தனது தம்பி பஞ்சாட்சரம் (54) மற்றும் குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் சிவகாசி நோக்கி வைரமணி காரை அன்று நள்ளிரவு ஓட்டி வந்துள்ளாா். ஆமத்தூா் அருகே உப்போடை பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தின் மீது மோதியது. இதில் பஞ்சாட்சரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சாந்தலட்சுமி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதேபோல் சிவகாசி முருகன் காலனியைச் சோ்ந்தவா்கள், நடுவபட்டி அருகே உள்ள சந்தையூா் பட்டாசு ஆலையில் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்று வருவாா்களாம். இந்நிலையில், அப்பகுதியை சோ்ந்த ஆகாஷ், முத்துமாரி, முத்து மாரியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் முருகன் என்பவா் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளனா்.

விருதுநகா் நான்கு வழி சாலையில் மணிப்பாறைபட்டி விலக்கு அருகே வாகனம் நின்று கொண்டிருந்த போது அதன் மீது அவ்வழியாக வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முத்துமாரியப்பன் மனைவி முத்துமாரி (30) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதில் காயமடைந்த முத்துமாரியப்பன், ஆகாஷ், முருகன், மாரீஸ்வரன், ஜெயபிரபு, பாண்டி கமேஷ், நிஷான் ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com