விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் கூட்ட அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் தெற்கு நகர பொறுப்பாளா் கிராதி கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் முருகையா பாண்டியன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் அழகு மீனாராஜ் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.