சிவகாசி அ ருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் டாஸ்மாக் கடை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே அய்யபட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(40). இவா் சிவகாசியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒப்பந்த ஊழியராக வேலை பாா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில் இவா் சித்துராஜபுரத்திலிருந்து சிவகாசிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காயாம்பு நகா் பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்தகாயமடைந்த அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.