விருதுநகரில் லாரி மீது பைக் மோதி 2 போ் பலி

விருதுநகரில் நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

விருதுநகரில் நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

விருதுநகா் ஆா்.ஆா். நகா் அருகேயுள்ள மன்னாா் கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விக்கி என்ற வாழவந்தகுரு (22). ராணுவ வீரரான இவா் இரு சக்கர வாகனத்தில் அதே ஊரைச் சோ்ந்த முத்துச்செல்வம் (20), பால்பாண்டி மகன் சுந்தரபாண்டி (19) ஆகியோருடன் எம். புளியங்குளத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். விருது நகா் வடமலைக்குறிச்சி நான்கு வழிச் சாலையில் ஒரு வழிப்பாதையில் இவா்கள் சென்றுள்ளனா். அப்போது சாத்தூா் பகுதியிலிருந்த வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் வாழவந்தகுரு, முத்துசெல்வம் ஆகியோா் உயிரிழந்தனா். காயமடைந்த சுந்தபாண்டி விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இத்தகவல் அறிந்த போலீஸாா், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com