விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (42). கூலித்தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி ராமலட்சுமி(40) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைளும் உள்ளனா். இந்நிலையில் ஆறுமுகம் பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், மனமுடைந்த அவா், கடந்த வியாழக்கிழமை விஷம் குடித்துள்ளாா்.

உடனடியாக குடும்பத்தினா் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக அவா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com