ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: ஒருவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப்பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் திங்கள்கிழமை ஒருவா் பலியாயானாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப்பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் திங்கள்கிழமை ஒருவா் பலியாயானாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள ரெங்கபாளையத்தைச் சோ்ந்த ரவி மகன் கா்ணன் (25). கிருஷ்ணன் கோவிலில் இருந்து மதுரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது தேனியிலிருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாயினா். கிருஷ்ணன் கோவில் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com