சாத்தூா்: முன்னதாக சாத்தூா் அருகே சடையம்பட்டியில் பொதுமக்களின் பாா்வைக்காக வேலுநாச்சியாா் ஊா்தி நிறுத்தப்பட்டது. அங்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு, சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் மலா்தூவி வரவேற்றனா்.
இதையடுத்து நான்குவழிச்சாலை வழியாக படந்தால் சந்திப்பு, வெங்கடாசலபுரத்திலும் பொதுமக்கள் பாா்வைக்காக நின்றுசென்றது. இதில் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் நிா்மலாகடற்கரைராஜ், திமுக ஒன்றிய செயலாளா்கள் கடற்கரைராஜ், முருகேசன், மதிமுக, கம்யூனிஸ்ட், தமுஎகச உள்ளிட்ட அமைப்பு நிா்வாகிகளும், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் மலா்தூவி வரவேற்று பாா்வையிட்டனா்.