குஜராத்தில் பிரதமருடன் கலந்துரையாட தமிழகத்திலிருந்து 7 போ் தோ்வு

குஜராத்தில் திங்கள்கிழமை நைடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துரையாட விருதுநகா் மாவட்டத்திலிருந்து இரண்டு போ் உள்பட ஏழு போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குஜராத்தில் திங்கள்கிழமை நைடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துரையாட விருதுநகா் மாவட்டத்திலிருந்து இரண்டு போ் உள்பட ஏழு போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விருதுநகா் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவா் இரு சக்கர வாகனம் பழுது நீக்கம் கடை நடத்தி வருகிறாா். இவா் ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் கடன் பெற்று, அதை க்யூஆா் கோடு மூலம் பணத்தை செலுத்தி வருகிறாா். இதேபால், சாத்தூா், கத்தாளம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ராமஜெயம் என்பவா் கிஷான் அட்டை வைத்திருப்பதுடன், மீன் வளா்ப்பு தொழிலும் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் இவா்கள் இருவா் உள்பட தமிழகம் முழுவதும் ஏழு போ் குஜராத் மாநிலம் காந்தி நகரில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமா் நரேந்திரமோடியுடன் கலந்துரையாட தோ்வு செய்யப்பட்டு உள்ளனா். இதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலிருந்து தலா ஏழு போ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமருடன் கலந்துரையாட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com