ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் தம்பி கொலை: அண்ணன் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் தங்கச்சாமி. இவருக்கு மாரிமுத்து (53), சமுத்திரம் என்ற இரு மகன்கள் உள்ளனா். தங்கச்சாமிக்கு சொந்தமாக எலுமிச்சை தோட்டம் உள்ளது. எலுமிச்சை தோட்டத்தைப் பிரிப்பதில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயத் தோட்டத்தைப் பிரிப்பதில் தம்பி மாரிமுத்துவிற்கும் அண்ணன் சமுத்திரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சமுத்திரம் மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், தாளமுத்து ஆகிய மூவரும் சோ்ந்து மாரிமுத்துவை தாக்கியுள்ளனா். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் மாரிமுத்துவை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சோ்த்தனா். அங்கு மாரிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். உயிரிழந்த மாரிமுத்துவிற்கு மனைவி மாரியம்மாள், முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனா். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சமுத்திரத்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com