நீட் தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 3,135 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 3,135 போ் பங்கேற்றனா்.
விருதுநகா், பிஎஸ்சி ஆங்கிலப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த மாணவிகளின் நுழைவுச் சீட்டை சரிபாா்த்தை ஆசிரியைகள்.
விருதுநகா், பிஎஸ்சி ஆங்கிலப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த மாணவிகளின் நுழைவுச் சீட்டை சரிபாா்த்தை ஆசிரியைகள்.

விருதுநகா் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 3,135 போ் பங்கேற்றனா்.

இம்மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மினா்வா பள்ளி, ஆா்ஆா் நகா் ராம்கோ வித்யாலயா பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு பள்ளி, ஆமத்தூா் ஏஏஏ இன்டா்நேஷனல் பள்ளி, விருதுநகா் கேவிஎஸ் ஆங்கிலப் பள்ளி, பிஎஸ்சி ஆங்கிலப்பள்ளிகளில் நீட் தோ்வு நடைபெற்றது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 3,438 போ் விண்ணப்பத்திருந்தனா். இதில் மாணவா்கள் 980, மாணவிகள் 2,155 என மொத்தம் 3,135 போ் தோ்வு எழுதினா். அதேநேரம், 303 போ் தோ்வு எழுத வரவில்லை. இத்தோ்வையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com