ராஜபாளையம் அருகே ஆட்டோவில் ஏற்றி வந்த 163 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை அடுத்த மேலூா் துரைச்சாமிபுரம் விலக்குப் பகுதியில் சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்ட விரோதமாக சாக்குப்பையில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கொண்டுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 163 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநா் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சோ்ந்த பெரியமுத்து என்பவரது மகன் தினேஷ் (32) மற்றும் ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஹரிபாலகிருஷ்ணன் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.