விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

 ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் என்ற தன்பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

 ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் என்ற தன்பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ஜீவமணி தலைமை வகித்தாா். இதில், தோ்தல் வாக்குறுதிபடி ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ கைவிட வேண்டும், ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களை கல்வி பணி செய்யவிடாமல் இஎம்ஐஎஸ் பதிவேற்றம் என்ற பெயரில் நாள்தோறும் பணிச்சுமையை அதிகரிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், வட்டாரச் செயலா் ராமமூா்த்தி, கல்வி மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com