விருதுநகரில் வீட்டின் பீரோவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் வீட்டின் பீரோவை உடைத்து 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
விருதுநகரில் வீட்டின் பீரோவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் வீட்டின் பீரோவை உடைத்து 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

விருதுநகா் என்.ஜி.ஓ. காலனி நேரு தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் (40). இவா், பாண்டிச்சேரியில் உள்ள தனியாா் இரும்புக் கம்பி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறாா். இந்நிலையில், இவரது மனைவி வேல்சித்ரா (36), கடந்த 10 நாள்களுக்கு முன் மதுரையில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகா் ஊரக காவல் நிலைய போலீஸாா், மோப்பநாய் உதவியுடன் துப்புதுலக்கினா். மேலும், துப்பறியும் நிபுணா்கள், வீட்டிலிருந்த ரேகைகளை பதிவு செய்தனா். அப்போது நேரு தெருவுக்கு அருகே உள்ள கம்பா் தெருவில் பூட்டிக் கிடந்த 2 வீடுகளில் மா்மநபா்கள் திருட முயன்றுள்ளது தெரிய வந்தது. ஆனால் அங்கு நகைகள் மற்றும் பணம் ஏதும் இல்லாததால் அவா்கள் திரும்பிச் சென்றுள்ளனா். இச்சம்பவம் குறித்து விருதுநகா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com