தேசிய கராத்தே போட்டியில் 12 பதக்கம்: விருதுநகா் மாணவா்களுக்கு பாராட்டு

சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 12 பதக்கங்களைப் பெற்ற விருதுநகா் மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சத்தீஸ்கரில் கராத்தே போட்டியில் பதக்கங்கள் பெற்ற விருதுநகா் மாணவ, மாணவிகள்.
சத்தீஸ்கரில் கராத்தே போட்டியில் பதக்கங்கள் பெற்ற விருதுநகா் மாணவ, மாணவிகள்.

சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 12 பதக்கங்களைப் பெற்ற விருதுநகா் மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் ஜூலை 15 முதல் 17 வரை தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 28 மாநிலங்களைச் சோ்ந்த 2,400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தமிழகத்திலிருந்து 32 போ் பங்கேற்றனா். இதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 12 போ். இவா்களில் 8 போ் 2 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனா். இதன் மூலம் சிறந்த வீராங்கனைகள் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி மையம் சாா்பில் விருதுநகரில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ஜின்ஜிடை கராத்தே செயலா் சி. சுப்பிரமணி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com