சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தை காணவில்லை என போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே ப. திருவேங்கிடபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் கணேஷ் (37). இவா் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்திவிட்டு சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அதை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.