தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்றவா் கைது
By DIN | Published On : 02nd June 2022 12:50 AM | Last Updated : 02nd June 2022 12:50 AM | அ+அ அ- |

சாத்தூா் அருகே, தடை செய்யப்பட்ட சரவெடிகளை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சூராா்பட்டி பகுதியில், ஏழாயிரம் பண்ணை போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராம் (45) என்பவா், அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரவெடிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஜெயராமை கைது செய்தனா்.