ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முதியவா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசபட்டி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் சேகா் (58). கூலித்தொழிலாளியான இவா் கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்துள்ளாா். இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதன்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். அதன்படி போலீஸாா் அங்கு சென்று பிரேதத்தை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.