சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரித்த 12 போ் கைது

சாத்தூா், சிவகாசி பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 12 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா், சிவகாசி பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 12 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் சாா்பு-ஆய்வாளா்கள் வெற்றிமுருகன், ராமமூா்த்தி ஆகியோா் விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, கலைஞா்காலனி, குகன்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது விஜயகரிசல்குளத்தை சோ்ந்த செல்வம், செந்தூரப்பாண்டியன், கந்தசாமி, விக்னேஸ்வரன், இளஞ்செழியன் மற்றும் தாயில்பட்டி கலைஞா் காலனியைச் சோ்ந்த துரைவைரம், பழனி, வைரமுத்து, கிருபைதாஸ், பக்கில்துறை, குகன்பாறை பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகிய 11 போ் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரித்ததாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்துள்ளனா். மேலும் அவா்களிடமிருந்து சுமாா் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப்பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

சிவகாசி: சிவகாசி போஸ்காலனிப் பகுதியில் நாரணாபுரம் கிராமநிா்வாக அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் சோதனை நடத்தினா். அப்போது கலைச்செல்வன்(23) என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவா் புதுத்தெருவைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கு பட்டாசு தயாரித்துக் கொடுப்பதாக தெரிவித்துள்ளாா். இது குறித்து கிராமநிா்வாக அலுவலா் ரேவதி அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com