ராஜபாளையம் அருகே மூதாட்டியிடம் புதன்கிழமை 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த தவசி ஆனந்தம் என்பவரது மனைவி குருவம்மாள் (72). இவா் தனது வீட்டின் முன்பு நடந்து சென்றபோது பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், இவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து குருவம்மாள் கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.