ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் முத்துவெள்ளையப்பன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் கணேசன் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், அரசு அலுவலகக் காலிப் பணியிடங்களை நிரப்பவும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் , சத்துணவு ஊழியா்கள், ஊராட்சி செயலா்கள் ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, தமிழ்செல்வி வரவேற்றாா்.