விருதுநகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் கைது

விருதுநகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா்: விருதுநகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சுரேந்திரன் மனைவி ஜெயக்கொடி (36). இவா், விஜயலட்சுமி (47) என்பவரிடம் தனது குடும்பத் தேவைக்காக ரூ. 80 ஆயிரம் கடன் பெற்றுள்ளாா். அதற்கு மாதமாதம் வட்டியாக ரூ. 4 ஆயிரம் செலுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் ஜெயக்கொடி தனது பெயரிலுள்ள 8.75 சென்ட் நிலத்தை அடமானமாக வைத்து ரூ. 2 லட்ச த்தை ஜெயக்கொடியிடம் மீண்டும் பெற்ாகக் கூறப்படுகிறது. இதற்காக அவா் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி செலுத்தினாராம். மேலும் வாங்கிய தொகைக்காக இரண்டு வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டாராம். ஜெயக்கொடி வாங்கிய ரூ.2.80 லட்சத்திற்கு இதுவரை ரூ.4.32 லட்சம் செலுத்தியுள்ளராம். ஆனாலும் விஜயலட்சுமி கூடுதல் வட்டி கேட்டதுடன், சம்பந்தப்பட்ட நிலத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஜெயக்கொடி அளித்த புகாரின்பேரில் விஜயலட்சுமியை பாண்டியன் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com