சாத்தூா் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்து 2 போ் பலத்த காயமடைந்தனா்.
சாத்தூா் அருகே ஜமீன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (27). இவரும், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த கோமதியும் காரில் சிவகாசியிலிருந்து, கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனா். சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சடையம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் மகேஸ்வரன், கோமதி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.