ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. பாா்க் தெருவில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது இருதரப்பினா் மோதிக்கொண்டனா்.
இது தொடா்பாக ராஜபாளையம் போலீஸாா்
வெற்றிவேல், கருப்பையா, கண்ணன், ராம்குமாா், கருப்பசாமி, குமாா் மற்றும் 2 நபா்கள், மாடசாமி, பாண்டி, மாடசாமி, குணசேகரன், சரவணன், உதயசூரியன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.