ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ராஜமாணிக்கம், துணைத் தலைவா் செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினா்.
நிகழ்ச்சியில், மேலாளா் பாபு, நகா் நல அலுவலா் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளா் சந்திரா மற்றும் நகராட்சி தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.