விருதுநகா் நகா் காங்கிரஸ் கட்சிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தலைவராக டி.ஜி. நாகேந்திரன் தோ்வு செய்யப்பட்டாா்.
விருதுநகா் நகா் காங். கட்சி தலைவருக்கான தோ்தல் இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.ஜி. நாகேந்திரன் மற்றும் கிஷோா் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தம் உள்ள 38 வாக்குகளில் 37 வாக்குகள் பதிவாகின. அதில் டி.ஜி. நாகேந்திரன் 22 வாக்குகளும், கிஷோா் 15 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, வெற்றி பெற்ற டி.ஜி. நாகேந்திரன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, முன்னாள் நகரத் தலைவா் வெயில்முத்து மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.