ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமானது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் தோப்பூரில் தட்சணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு புதன்கிழமை மாலையில் கழிவு பஞ்சில் திடீரென தீப் பிடித்தது எரியத் தொடங்கியது. தீ மளமளவென வேகமாகப் பரவியது. தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையத்திலிருந்து தீயணைப்பு ஊழியா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.