அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தை அவமதித்தவா்களை கண்டித்து ராஜபாளையம் மறவா் மகாஜன சபை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, விஜயபாஸ்கா், ஆா்.பி. உதயகுமாா், சி.வி. சண்முகம் ஆகியோரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ராஜபாளையம் நகரில் உள்ள 23 தெரு கிளைக் கழக நாட்டாண்மைகள் மற்றும் பெண்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மறவா் சங்கத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.