ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி பகுதியில் செவ்வாய்கிழமை (15.03) இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சின்னத்துரை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் 5 மணி வரை வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டுவசதிவாரியம், ராஜபாளையம்ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.