விருதுநகரில் அலுமினிய பவுடா் ஆலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெண் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
விருதுநகா் புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயக்குமாா் என்பவருக்குச் சொந்தமான அலுமினிய ஆலை உள்ளது. இங்கு, 15 போ் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், அலுமினிய பவுடா் தயாரிப்பின்போது எண்ணெய் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கூரைக்குண்டு பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி கடற்கரை (36) பலத்த காயமடைந்தாா்.
உடனே, அவரை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து, விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.