செட்டிக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி

அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சியிலுள்ள ஆா்.கே. 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ரூ. 48.86 லட்சம் மதிப்பிலான
நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீதை பயனாளியிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.கே.ஆா். பிரபாகரன்.
நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீதை பயனாளியிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.கே.ஆா். பிரபாகரன்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சியிலுள்ள ஆா்.கே. 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ரூ. 48.86 லட்சம் மதிப்பிலான நகைகளை 196 பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.கே.ஆா். பிரபாகரன் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினாா்.

செட்டிக்குறிச்சி கிராமத்தில் ஆா்.கே. 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செட்டிக்குறிச்சி, சின்னசெட்டிக்குறிச்சி, சந்தையூா், சுக்கிலநத்தம், ராமசாமிபுரம் ஆகிய கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனா்.

இந்நிலையில் தகுதியுள்ள, 5 பவுனுக்குக் குறைவான நகைக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். இதன்படி, உரிய ஆய்வு செய்து 196 பயனாளிகளின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலின்படி தள்ளுபடி செய்யப்பட்ட நகைக் கடனின் மொத்த மதிப்பு ரூ. 48. 86 லட்சம் ஆகும்.

எனவே, 196 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் ரசீதுகளையும், நகைகளையும் செட்டிக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.கே.ஆா். பிரபாகரன் நேரில் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com