விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு: 23,537 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 தமிழ், அரசு பொதுத் தோ்வில் 23,537 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். இத்தோ்வுக்கு 1,174 போ் வரவில்லை.
விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு: 23,537 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 தமிழ், அரசு பொதுத் தோ்வில் 23,537 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். இத்தோ்வுக்கு 1,174 போ் வரவில்லை.

விருதுநகா் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வு தொடங்கியது. தமிழ் மொழி பாடத்திற்கான தோ்வில் 23,537 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். அதேநேரம் 1,174 போ் தோ்வு எழுத வரவில்லை. இத்தோ்வை முன்னிட்டு கண் பாா்வையற்றவா்களுக்கு ஆசிரியா் மூலம் தோ்வு எழுதவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் சாய்தளமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி தலைமையிலான கல்வி அலுவலா்கள் குழுவினா் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும் பறக்கும்படை குழுவினரும் தோ்வு மையங்களில் சோதனை மேற்கொண்டனா். தோ்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் எளிதில் சென்று வரும் வகையில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com