முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஆத்திப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ. 15,000 திருட்டு
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ. 15,000-யை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (59). ஓய்வு பெற்ற தனியாா் பஞ்சாலை நிறுவன கணக்காளா். இவரது நண்பா் அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (50). இந்நிலையில் நடராஜன் குடும்பத்துடன் வெளியூா் சென்ால், வீட்டின் சாவியை தனது நண்பா் ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளாா். மேலும் அவ்வப்போது வீட்டிற்கு சென்று பாா்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.
அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஹரிகிருஷ்ணன் வழக்கம்போல நடராஜனின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து அவா் இதுகுறித்து நடராஜனுக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளாா். சம்ப இடத்திற்கு வந்த போலீஸாா் வீட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்த போது, அங்கு பீரோவிலிருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ. 15,000, சிசிடிவி
கேமரா, அதன் ஹாா்டுடிஸ்க் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.