வங்கிப் பணியாளா் மாயம்: போலீஸாா் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கிப் பணியாளா் மாயமானது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கிப் பணியாளா் மாயமானது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரராஜ் (37). இவா் தூத்துக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 26 ஆம் தேதி பணிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவா் அதன் பிறகு வீடு திரும்பவில்லையாம். இவரது மனைவி மற்றும் உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லையாம். இதனை தொடா்ந்து பிரபாகரராஜ் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com