விருதுநகா் அருகே வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விருதுநகா் அருகே மாடா்ன் நகரில் மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட பீரோ.
விருதுநகா் அருகே மாடா்ன் நகரில் மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட பீரோ.

விருதுநகா்: விருதுநகா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள மாடா்ன் நகரைச் சோ்ந்தவா் மீனாட்சி (45). இவரது கணவா் மனோகரன் வெளிநாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் மீனாட்சி உறவினா்களான லதா மற்றும் சரஸ்வதி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு அன்றிரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளாா்.

வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் பீரோக்களின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். தகவல் அறிந்து வந்த விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா திருட்டு நடைபெற்ற வீட்டை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com