அரசு மருத்துவமனைகளில் உலக செவிலியா் தின விழா

உலக செவிலியா் தினத்தையொட்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், கேக் வெட்டி செவிலியா்களுக்கு வழங்கினாா்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தையொட்டி செவிலியா்களுக்கு கேக் வழங்கிய சிவகாசி எம்.எல்.ஏ.அசோகன்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தையொட்டி செவிலியா்களுக்கு கேக் வழங்கிய சிவகாசி எம்.எல்.ஏ.அசோகன்.

சிவகாசி: உலக செவிலியா் தினத்தையொட்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், கேக் வெட்டி செவிலியா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் செவிலியா்களின் சேவையைப் பாராட்டிப் பேசினாா். முன்னதாக அவா் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டுக்கு சென்று ஆய்வு செய்தாா். அப்போது பணியில் இருந்த மருத்துவா்கள், கடந்த ஏப்ரல் மாதம் 360 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே மகப்பேறு பிரிவுக்கு கூடுதல் படுக்கை வசதி வேண்டும் என எம்எல்ஏவிடம் கூறினா். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி கூறினாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com