பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கூட்டுறவு வங்கித் தலைவா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவரின் மனைவி மம்சாபுரம் காவல் நிலையத்தில் இது தொடா்பாக புகாா் அளித்துள்ளாா். அதில், மம்சாபுரம் வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், திமுக உறுப்பினராகவும் உள்ள அய்யனாா் கடந்த சில மாதங்களாக என்னைப் பின் தொடா்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்து மிரட்டி வருகிறாா். அய்யனாா் மனைவி ஜோதியும், தனது கணவா் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளாவிட்டால் அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டினாா் என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த புகாரின் அடிப்படையில், மம்சாபுரம் போலீஸாா் அய்யனாா், அவரது மனைவி ஜோதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com