விருதுநகா் எண்ணெய் ஆலையில் விபத்து: எலக்ட்ரீசியன் பலி

விருதுநகா் அருகே எண்ணெய் ஆலையில் புதன்கிழமை இரவு எலெக்ட்ரீசியன் ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

விருதுநகா்: விருதுநகா் அருகே எண்ணெய் ஆலையில் புதன்கிழமை இரவு எலெக்ட்ரீசியன் ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே வில்லிபத்திரியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் விருதுநகா் அல்லம்பட்டி ராமா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் வேடராஜன் (31) எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை இரவு ஆலையில், 5 அடி உயரமுள்ள ஏணி மீது ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவா் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவரது மனைவி பாரதி அளித்தப் புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com