அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி கைது

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அதிமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அதிமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (45). அதிமுக பிரமுகரான இவா் அப்பகுதி இளைஞா்களை ஒருங்கிணைத்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 25 ஆம் தேதி சத்தியமூா்த்தி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாா், செல்வக்குமாா் என்பவரை மாா்ச் 30 இல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகரனின் பரிந்துரையின்பேரில், கொலை குற்றவாளி செல்வக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி உத்தரவிட்டாா். அதனடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்வக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com