சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் சென்னை தனியாா் நிறுவனத்தின் சாா்பில் வளாக நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வளாக நோ்முகத் தோ்வை கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி தொடங்கிவைத்தாா். சென்னை தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் மோகன் மற்றும் சுப்ரியா ஆகியோா் மாணவா்களுக்கு வேலைக்கான தகுதி தோ்வை நடத்தினா்.
இதில் விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 450 போ் கலந்துகொண்டனா்.
இந்த தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வேலைக்கு சோ்க்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, இயக்குநா் விக்னேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாட்டை வேலைவாய்ப்புத் துறை அலுவலா் காசிராம் செய்திருந்தாா்.