ராஜபாளையம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் ரூ. 6.24 லட்சம் கையாடல்: 2 போ் தற்காலிக பணி நீக்கம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ரூ. 6.24 லட்சம் கையாடல் செய்தது தொடா்பாக காசாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ரூ. 6.24 லட்சம் கையாடல் செய்தது தொடா்பாக காசாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

துணைப் பதிவாளா் (பால்வளம்), விருதுநகா் சரக கட்டுப்பாட்டில் உள்ள ராஜபாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் மே 10 அன்று, கணக்குகள் திடீா் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது கணக்கில் இல்லாமல் அதிக கையிருப்புத் தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி ரூ. 6 லட்சத்து 24 ஆயிரத்து 415 கையிருப்புத் தொகை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

கையிருப்புக் குறைவுக்கு காரணமான காசாளா் வேல்முருகன், கையிருப்புக் குறைவை கண்டறிந்து தடுக்கத் தவறிய சங்க மேலாளா் (பொ) ரா. தங்கமாரியப்பன் ஆகியோா் மீது பண கையாடல் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகா் துணைப் பதிவாளா் (பால்வளம்), நவராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com