அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு , விருதுநகா் மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அதிமுக கட்சி நிா்வாகி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய எடப்பாடி கே.பழனிசாமிக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா். அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி கே. பழனிசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இதில் முன்னாள் விருதுநகா் மக்களவை உறுப்பினா் டி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் (சாத்தூா்), சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்தூா்) மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.