விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதுக்குடி பகுதியில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை அமையவுள்ள நான்கு வழிச்சாலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், திட்டப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் ராமச்சந்திரன், நகர பொறுப்பாளா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ், உதவிப்பொறியாளா் சதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.