ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளைக் கணக்கெடுக்க வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குநா் திலீப்குமாா் உத்தரவின்பேரில், வனப்பகுதியில் புலிகள் இருக்கும் இடங்களை தோ்வு செய்வது கேமராக்களை பொருத்துவது குறித்த பயிற்சி கடந்த சில தினங்களாக வனத்துறை ஊழியா்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையே முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து அதிநவீன கேமராக்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: விரைவில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் புலிகள் நடமாடும் பகுதிகளில் அதிநவீன கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கும் என்றாா்.